தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரத்தன்று, சிவ பெருமான் உயிர்களுக்கெல்லாம் ஆசி தரும் நிகழ்வு ஆற்றங்கரையில், பிட்டுத் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தின் ரோகினி நட்சத்திரத்தன்று கண்ணபிரானின் பிறந்த நாள் "கிருஷ்ணா ஜெயந்தி" எனக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கண்ணபிரானின் ஊர்வலத்துடன் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் என்பது ஒரு ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார்.
சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர் இவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
எனவே தான் ஆவணி மாதத்தில் கிரஹப் பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.
விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.
ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றே கூறலாம்.
No comments:
Post a Comment