Wednesday 3 August 2011

ஆடி வெள்ளி - இலக்குமி பூஜை

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும்  சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.


ஆடி வெள்ளியன்று இலக்குமியை வழிபட்டால், பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அருளோடு வரும் பொருள் என்று தான் பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் இலக்குமி என்றும், திருமகள் என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லக்குமியின் அருள் இருந்தால், நாம் திட்டமிட்ட படியே வாழ்க்கையை நடத்த இயலும்.





பழ அலங்காரம்
வளையல் அலங்காரம்

 திருத்தேர் அலங்காரம்






குத்துவிளக்கை இலக்குமியாக பாவித்து அலங்கரித்து பொன் ஆபரணங்கள் சூட்டி (தங்களால் இயன்ற அளவு வீட்டில் உள்ள நகைகளை அணிவித்து), மரப்பலகையில் மஞ்சளால் கோலமிட்டு அதன் மேல் பட்டுத் துணி விரித்து அதில் பச்சரிசியை சிறிதளவு தூவி அதில் இலக்குமியை (அதாவது அலங்கரித்த குத்து விளக்கை) அமரச் செய்யவும்.


இது ஒரு விதமான வழிபாடு. மற்றொன்று,

ஒவ்வொரு ஆடி மாதமும், ஆடிவெள்ளியன்று (அது முதல் வெள்ளியாக இருந்தாலும் சரி அல்லது அம்மாதத்தின் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை) அம்மனை ஆவாகணம் செய்து வழிபடுவது ஒரு முறை.






No comments:

Post a Comment