Wednesday 28 September 2011

கொலு பார்க்க எங்க வீட்டுக்கு வாங்க

நவராத்திரியின் போது தென்னிந்தியாவில் கொலு வைப்பது வழக்கம். 'அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவி இருக்கிறாள். அவள் கருணையினால் தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன!' என்பதை விளக்கவும், எந்தெந்த படிகளில் எந்தெந்த பொம்மைகளை வைக்கவேண்டும் என்ற ஐதீகத்தையும் வைத்தார்கள் நமது முன்னோர்கள். 

திருவிளக்கை ஏற்றிவைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

- என்ற பாடலுக்கேற்றாற்போல பலரும் தங்கள் வீட்டில் கொலு வைத்து, நண்பர்கள், உற்றார் மற்றும் உறவினர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து, தங்கள் அமைத்த கொலுவை பார்க்க வைத்து வந்தவர்களுக்கு விருந்தோம்பலும் நடைபெறும்.
இதோ கொலு வைக்க உதவும் படிகளின் எண்ணிக்கையும் அதன் பொருளும்:
கீழிருந்து,
1 ஓரறிவு செடி, கொடி, மரங்கள், பூங்கா……
2 இரண்டறிவு நத்தை, சங்கு, ஊர்வன….
3 மூன்றறிவு எறும்பு – தரையில் ஊர்வன…
4 நான்கறிவு பறவை, வண்டு – பறப்பன
5 ஐந்தறிவு பசு போன்ற விலங்கினங்கள்
6 ஆறறிவு மனித பொம்மைகள், செட்டியார்
7 மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர்
8 தெய்வம் தசாவதாரம்
9 பூரண கும்பம் அம்பிகையின் திரு உருவம்.

அம்பிகையின் அருளாடலின் கீழேதான் அனைத்து ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன என்பதையும் இந்த கொலு அமைப்பு விளக்குகிறது.

No comments:

Post a Comment