திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.ஏனெனில் இதுவே மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேசப் பெருமாளாக அவதரித்த மாதமாகும். அதனாலேயே திருப்பதியில் கூட இம்மாதமே பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள் புரட்டாசி மாதத்தில் தனது பக்தர்கள் தனக்கு மிகவும் நெருங்கி வர வேண்டும் என விரும்புகிறார். ஆனால் அனைவரும் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்வது என்பது இயலாதக் காரியம் என்பதால் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிப்படுகின்றனர். சிலர் தங்களது வீடுகளில் மாவிளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். இது மட்டுமின்றி புரட்டாசி மாதம் சனி பகவானுக்கும் மிக ஏற்றதாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவான் தனது சக்தியை இழந்து விடுவதாகவும் அதனால் அச்சமயத்தில் அவரை வழிப்படுவது சிறந்த பலனைத் தரும் எனவும் நம்பப்படுகிறது. பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவ உணவைத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். சிலர் குறைந்தது புரட்டாசி சனிக்கிழமைகளிலாவது சுத்த சைவ உணவை உண்பது, ஒருப்பொழுது மட்டுமே உண்பது என தங்களால் இயன்றவரை விரதமிருக்கின்றனர்.
No comments:
Post a Comment