ஓணம் வந்நல்லோ........
ஓணம் கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்திலும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இவ்விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம். ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகள் ஊர்வலம் ஆகு ம். யானைகள் தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட் டு வீதிகளில்
ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன.
இந்த ஆண்டு (2011) செப்டம்பர் 9-ம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment