Saturday 17 September 2011

ஆன்மீகம் - புரட்டாசி மாதம்

இதோ வந்துவிட்டது (செப்டம்பர் 18) புரட்டாசி மாதம்.  புரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என முன்பே பார்த்தோம். அதே போல புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். ஆம் எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற ஒலி முழங்கும். அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை, மிகவும் விசேஷம். திருப்பதியில் ’ஏழுகொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா, கோவிந்தா’ என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப, நம்முள்ளும் ஒரு அதிர்வு ஏற்பட்டு நாமும் ’கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்தில் நம்மையுமறியாமல் சேர்ந்துகொள்கிறோம்.

ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
புராண்புருஷா கோவிந்தா…… என்ற பாடல் நம்மை ஈர்க்கிறது.

No comments:

Post a Comment