Tuesday 18 October 2011

கேதார கௌரி விரதம்

விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையில், விநாயகனும் முருகனும் கூட இருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்டினார். நந்தி மத்தளம் கொட்ட, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரின் நடனம் அமர்க்களமாக நடந்தேறியது.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் விகடக்கூத்து ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார். பிறகு உமாதேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். கோபமுற்ற உமாதேவி “உனது சக்திகளை இழக்கக் கடவுக” என்று சபித்தார். அதனால் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார் பிருங்கி. தன் பக்தன் படும் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் தடியொன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்க வழி செய்தார். இதனால் சிவன் மேல் கோபம் கொண்டு பூவுலகுக்கு வந்து, ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். தேவியின் வருகையால் அந்த வனமே புதுப்பொலிவு பெற்றது. அங்கு வசித்த கௌதம முனிவர் இத்திடீர் மாற்றம் ஏன் அறிய முனைந்தார். உமாதேவியைக் கண்டு நடந்தவற்றைக் கேட்டறிந்து கொண்டார்.
புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றி கெளதம முனிவர் உமாதேவியிடம் விளக்கினார். உமை அம்மையும் விரதம் மேற்கொண்டு விரத முடிவில் சிவன் மகிழ்ந்து பார்வதி தேவியை ஆட்கொண்டு, அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

No comments:

Post a Comment