Tuesday 18 October 2011

ஐப்பசி மாதம்

ஐப்பசி மாதம் 'துலா மாதம்' என போற்றப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் பகலும், இரவும் சமமாக இருக்கும். அதனால்தான் அது, "துலா (தராசு) மாதம்' எனப் பெயர் பெற்றது.

ஸ்ரீரங்கத்தில் அருள் புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஐப்பசி மாதத்தில் தங்கக் குடத்தில் ஸ்ரீரங்கம் தென்கரையில் ஓடும் காவிரி நதியிலிருந்து திருமஞ்சனத்திற்கு யானை மீது தீர்த்தம் கொண்டு வருவார்கள். இது பெருமாளுக்கு நடைபெறும் "துலா ஸ்நானம்' ஆகும்.

பார்வதி தேவி, விரதம் கடைப்பிடித்து சிவபெருமானின் உடலில் சரிபாதி இடத்தைப் பெற்றது துலா மாதமான ஐப்பசியில் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

திருப்பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவிற்கு மாலை சூடிய நாள், ஓர் ஐப்பசி மாத சதுர்த்தி நாள் ஆகும். இந்த நாளில்தான் ராமபிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுபவித்த பின், சீதாப் பிராட்டி மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு வந்தார்.

கேதார கெளரி விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகிய விரதங்கள் ஐப்பசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment