Saturday 12 May 2012

வைகாசி மாதம்

தமிழர் காலக் கணிப்பு முறையின்படி ஆண்டின் இரண்டாவது மாதம் வைகாசி ஆகும். இம் மாதப் பெயர் விசாக நட்சத்திரத்தின் பெயரையொட்டி ஏற்பட்டது. சூரியன் மேஷ இராசியை விட்டு, ரிஷப இராசிக்குள் புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் ரிஷப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். 
ஓர் ஆண்டின் பன்னிரு மாதங்களை நான்கு பருவங்களாக வகுத்துள்ளனர்.  இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம்
சித்திரையும் வைகாசியும் வசந்த ருது- அதாவது இளவேனிற்காலம். உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதமான வைகாசியில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்.
வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள்.
 இந்த மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம், ஞானச் சிறப்பு பெற்றது. வைகாசி விசாகம் வேனிற்கால விழா நாள்; முருகனின் அவதார நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தவன் முருகன். சிவபெருமானின் ஆறு தலைகளிலும் 18 கண்கள் உண்டு. ஆனால் முருகன் தோன்றியதோ ஆறு தலைகளிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களால் மட்டுமே. நெற்றிக் கண்ணால் அரூபத்தைக் காண இயலும். சிவனின் நடுக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியமையால் அவன் ஆண் பிள்ளை. இந்தத் திருநாளில் முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

No comments:

Post a Comment