- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
- சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
- மாதே வளருதியோ வனசெவியோ நின்செவிதான்
- மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
- வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
- போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
- ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
- ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment