முருகப் பெருமான் அசுரன் சூரபத்மனை வதம் செய்த தினம்தான் சூரசம்ஹாரம். வருடந்தோறும் ஐப்பசி திங்கள் தீபாவளிக்கு மறுநாள் பிரதமை திதியில் ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பிக்கும்.
முருகன் சூரபத்மனுடன் போரிட்ட ஆறு நாளும் ஸ்கந்த சஷ்டி விரதம் அனுசரித்து விட்டு அசுரனை வதம் செய்த தினத்தை சூரசம்ஹாரத் திருநாளாகக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வர்.
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் இந்த ஆறு நாளும் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு விரதமிருப்பர். முடியாதவர்கள் சூரசம்ஹாரமன்று மட்டும் விரதமிருப்பர்.